பாஜக கங்கை நதி போன்றது.! அமைச்சர் பொன்முடி உடனான சந்திப்புக்கு பின் திமுக மூத்த தலைவர் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

பாஜக கங்கை நதி போன்று அழுக்கு நிறைந்தது என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பின்னர் இருவரையும் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடியற்காலை 3 மணிவரை விசாரணை நடத்தினர் . மேலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு மூத்த திமுக அமைச்சர்கள் நேரில் வந்து சந்தித்து சென்றனர். அதே போல திமுக மூத்த நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், பாஜக இன்று தனது 36 ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளது. 37வது கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என விமர்சித்தார்.

மேலும், பாஜக எதிர்கட்சிகளை கண்டு அச்சப்படுகிறது என்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளே உதாரணம். இன்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி செல்ல தயாராக இருக்கிறார். உலகில் மிக பெரிய ஊழல் கட்சி பாஜக தான். சுமார் 12 லட்சம் கோடி பொதுத்துறை வங்கியிடம் இருந்து காணாமல் போயுள்ளது.

கர்நாடகவில் கடந்த முறையும், மகாராஷ்டிராவிலும் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது அதற்கு எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்பினார். பெரிய தொழிலதிபர்களின் 60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது என விமர்சித்தார். மேலும், எதிர்கட்சிகளை திட்டமிட்டு பாஜக பழிவாங்குகிறது. பாஜகவின் கைப்பாவையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டாலே குற்றவாளி ஆகிவிட முடியாது.பாஜக ஒரு கங்கை நதி போன்றது. கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே பாவங்கள் போகும் என கூறுவது போல, பாஜகவில் சேர்ந்தாலே அவர்கள் உத்தமர்கள் ஆகிவிடுகிறார்கள். கங்கை எவ்வளவு அழுக்கு நிறைந்ததோ, பாஜகவும் அவ்வளவு அழுக்கு நிறைந்தது என அமைச்சர் பொன்முடியை சந்தித்த பின்னர் திமுக மூத்த நிர்வாகி டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago