சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் கரூர் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
அசோக்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இந்த நோட்டீஸ் குறித்து இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்காமல் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், மீண்டும் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பொறியாளர்கள் உதவிகளுடன் பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கொங்கு மெஸ் உணவகத்தின் உரிமையாளர் செந்தில் பாலாஜியின் நண்பர் என கூறப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…