கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்த சரோஜா,சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக அவரது உறவினரான ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து,காவல்துறையினர் சரோஜாவை கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து,முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சரோஜா மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமின் மனுவை ஒத்தி வைத்திருந்தது.இதனையடுத்து,அவர் தலைமறைவாகினார்.
இந்நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.இதனைத் தொடர்ந்து,அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…