ADGP Mahesh Kumar Agarwal [FILE IMAGE]
போதைப்பொருள் விற்பனை செய்தவர்களிடம் ரூ.18 கோடி பறிமுதல் செய்துள்ளதாகவும் ஏடிஜிபி தகவல்.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகிலேயே போதைப்பொருகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 2.0 என்ற மிஷன் மேற்கொள்ளப்பட்டது. இதில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், சென்னையில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், நடப்பாண்டு இதுவரை தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வியாபாரிகளின் 5000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவித்தார்.
மேலும், 2022-ல் 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் விற்பனை செய்தவர்களிடம் ரூ.18 கோடி பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பாக மாணவர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் போதையில்லா தமிழகம் சாத்தியமாகும் என கூறினார்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…