தமிழகத்தில் 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
இதனால், 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த, ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செல்லும். அரக்கோணம், கோயம்புத்தூர் வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த 3 சிறப்பு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…