ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் இன்று நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்றும், கட்சி தொடர்பான அனைத்து செய்திகளும் ரஜினிகாந்த் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது நேர்மையான அரசியல், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வது தான் ஆன்மீக அரசியல். அந்த வகையில், ஆன்மிக அரசியலுக்கு மத அரசியலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்றும் ஆன்மீக அரசியலை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி என கூறினார்.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…