ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…! தமிழக அரசின் முடிவிற்கு நன்றி…! – கனிமொழி

Published by
லீனா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி.

கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு  உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது.

இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கனிமொழி எம்.பி., இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தமிழ் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி. தமிழ் நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

31 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

1 hour ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

4 hours ago