ஆன்லைன் ரம்மியால் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது உயிரையும் துச்சமென கருதி இழக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் தான் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த வடு மறைவதற்குள், இன்று காலை சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணத்தை இழந்து கடனாளி ஆகி உள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல், அவர் கடனை திருப்பி செலுத்த இயலாததால் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…