அரக்கோணம்:போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகளாக அரசு பணிபுரிந்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்..!

Published by
Edison

அரக்கோணத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் 22 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின், அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவர்,கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, ஷோபனாவின் மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் மாவட்ட தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்ததுள்ளது.இதன் காரணமாக,போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியாற்றியதால் ஷோபனா,மாவட்ட கல்வி நிர்வாகத்தால் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா,போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியதற்காக ஷோபனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,ஒரு பள்ளி தலைமை ஆசிரியரே இப்படி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 22 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்ற செய்தி அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவரயும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Published by
Edison

Recent Posts

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

38 minutes ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

2 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

2 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

3 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

3 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago