பரபரப்பு.! நடுரோட்டில் வைத்து ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினர் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி அவதூறாக பேசியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்தது.
  • மதுரையில், பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி, அவரது உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது எனவும் அந்த மேடையில் தெரிவித்திருந்தார். பின்னர் ரஜினியின் இந்த பேச்சிக்கு ஆங்காகே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டித்து கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற 23.1.2020 தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தற்போது மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி ஆதித் தமிழர் கட்சியினர் நடுரோட்டில் ரஜினியின் உருவ பொம்மையை  வைத்து எரித்தனர்.  இதனிடையே ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து அவர்களை வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மதுரை பேருந்து நிலையம் பரபரப்பு காணப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

1 hour ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago