வருடந்தோறும் நடத்தப்படக் கூடிய தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை விதிப்படி வருடம்தோறும் இரண்டு முறை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. எப்பொழுதும் பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், மே ஜூன் ஆகிய மாதங்களில் மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மார்ச் 9ம் தேதி தொடங்கப்பட்ட சட்டப்பேரவை ஏப்ரல் 9 வரை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்த போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ம் தேதிக்குள் அவசர அவசரமாக கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டபேரவை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளதால், வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதிக்குள் நிச்சயம் இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் எனவும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் இந்த குளிர்கால கூட்டத்தொடரை நடத்த போவதாகவும் சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…