நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகின்ற ஜன.17 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் சந்திக்கவுள்ளனர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு,ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது.ஆனால்,இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பாததால்,நீட் விலக்கு மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து,எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மூன்று முறை சந்திக்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து,சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் முதல்வர் தலைமையில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து கட்சியினரும் தங்களது ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,மத்திய அமைச்சர் அமித்ஷாவை வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக வலியுறுத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…