மன்னிப்பு கேட்ட தமிழக அதிகாரிகள் – அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

Published by
Rebekal

பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு  தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகள் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த சட்ட விதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில், பணி மூப்பு பட்டியலை தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதேபோல உச்சநீதிமன்றமும் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு  அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்க முடியாது என தெரிவித்திருந்தது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நீதிபதி இல்லாததால் இன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தமிழக அதிகாரிகள் பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

11 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

12 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

13 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

14 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

16 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

16 hours ago