பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகள் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த சட்ட விதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு […]