தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Published by
மணிகண்டன்

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்

தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள வாக்காளர்கள்களிடம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுவையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரம், மற்ற ஆவணங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவுக்கு முன்பே சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு சமயத்தில் சரி பார்ப்பது வாக்களிக்க வருபவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், தன்னிடம் பல வாக்காளர்கள் காலை 7 மணி முதல் தாங்கள் காத்திருப்பதாகவும், ஆனால் இன்னும் வாக்களிக்க முடியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை. நல்லவர்களை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்க வர வேண்டும். இது அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவம். அனைவரும் ஓட்டு போடுங்கள். இது நமது நாட்டுக்கு நல்லது என்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago