துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை பேச முடியும் -ஸ்டாலினுக்கு தமிழிசை மீண்டும் பதிலடி

Published by
Venu

என்னால் துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும்  என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை  தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் ,ஒரு சவால் விடுகிறோம், மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரு மணி நேரம் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில்,  எதையும் ஆதாரத்தோடு பேச வேண்டும்.தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என்று பதில் கொடுத்தார்.

இந்த நிலையில் சென்னையில் ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், துண்டு சீட்டு இல்லாமலும் புள்ளிவிவரங்களை என்னால் பேச முடியும். துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்டாலின் மேடையில் ஒரு தலைப்பை கொடுத்தால் என்னால் 3 மணி நேரம் கூட பேச முடியும்.எந்த ஒரு துண்டு சீட்டும்,உதவியாளர்களும் இல்லாமல் பேச முடியும்  என்றும் தெரிவித்தார்.

Recent Posts

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

5 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

6 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

20 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago