மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார்.
பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் மேலாடை இல்லாமல் துண்டு மட்டும் அணிந்துகொண்டு வருவது, ஆபாச வலைத்தள இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற பல குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, இன்று காவல் துறை ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு முன்பே தன் தொலைபேசியில் இருந்த பல தரவுகளை அளித்ததாகவும், தொலைபேசியில் அளிக்கப்பட்டதை தரவுகளை மீட்க தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ராஜகோபாலன் தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும், மாணவிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…