வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல் ஆகியிருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜனவரி மாதம் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது, பிரபல ஜவுளி கடையில் பணியாற்றி வந்த 24 வயது பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி இரவு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். வேலூர் கோட்டை பூங்காவுக்கு சென்றுகொண்டிருந்த போது காதலனை தாக்கி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை, செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வன்கொடுமை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…