கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன். இவர் கேரள மாநிலம் கண்ணூரில் சிஆர்பிஎப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் மீது வைக்கோல் ஏற்றிவந்த டெம்போ மோதியதாக தெரிகிறது. இதனால் இரு வாகன ஓட்டுனர்களுக்கும் பிரச்னை எழுந்தது. பிரச்சனை பெரிதாவது போல தெரிந்ததால் சக பயணிகளுடன் அருளப்பனும் சமாதானம் செய்ய கீழே இறங்கி பேசி வந்தனர். அப்போது பின்னர் வந்த இன்னொரு டெம்போ வாகனம் வைக்கோல் டெம்போ மீது மோதியது.
அந்த சமயம் வைக்கோல் வாகனத்தின் முன்னால் நின்றிருந்த அருளப்பன் உள்ளிட்ட சிலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் அருளப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அடிபட்ட சிலர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மறைந்த அருளப்பனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், விஜயராணி என்கிற மனைவியும் உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…