street dogs [File Image]
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த ஆண்டு (2025 ஏப்ரல் 1) நிலவரப்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் வரை) மட்டும் 1.24 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ள தாக ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டு இருக்கிறது.
இதனையடுத்து, இந்த மாதிரியான சம்பவங்களுக்கு தீர்வு வேண்டும் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டது மட்டுமில்லாமல் ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேர் தெருநாய்களால் கடிபட்டுள்ளனர். 2024-ல் மட்டும் 4.25 லட்சம் பேர் கடிபட்டு, 82 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள நாய்களை அடையாளம் கண்டு, மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்ய வேண்டும்.
இது மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ஐ மீறுவதாக இருக்கலாம் என செய்தியாளர் கேள்வி எழுப்ப அதற்கு, “மக்களின் உயிரை விட எதுவும் முக்கியமில்லை. சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அரசு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி பதில் அளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஊட்டி, மதுரை போன்ற இடங்களில் செயல்படும் நடமாடும் ஸ்டெரிலைசேஷன் (mobile sterilization) திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.
ஆபத்து இல்லாத நாய்களை தத்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் , மக்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து தெருநாய்க்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு நாளும் நாய்க்கடி நிகழ்வு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவை” எனவும் அன்புமணி பேசினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…