தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாத்தின்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக டிஜிபி திரிபாதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல்த்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில்,தமிழகத்தில் நுழையக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.நேற்று இரவு முதலே பாதுகாப்பு தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா அதிகம் கொண்டாடப்படும் கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை வழியாக தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…