திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி. இவர் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் முலம் மாதம் 1000 ரூபாய் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அலைந்தது திரிந்துள்ளர். எனினும் அதிகாரிகள் ஓய்வூதியம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்னர் இதுப்பற்றிய விவரம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. இதையறிந்த திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். இதில், உண்மையில் அந்த முதாட்டி உதவித்தொகை பெற தகுதியானவர் என்பது தெரிந்து வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று மூதாட்டிக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார். ஊடகத்தில் வந்த செய்தியை உரிய விசாரணை செய்து நேரடியாக சென்று அரசின் உதவித்தொகை கிடைக்க செய்த ஒருசில அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது என்று சமூகசேவகர்கள் கருதுகின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…