கள்ளச்சாராயம் எதிர்ப்பு.. இன்று பாஜக ஆர்ப்பாட்டம்.. ஆளுநரிடம் புகார் அளிக்க திட்டம்.!

Annamalai

விஷ சாராயம் அருந்தி பலர் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்ததை எதிர்த்து பாஜக இன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி 14 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில்வ விஷ சாராயம் அருந்தி 8 பெரும் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கள்ள சாராய மரண சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் தமிழக்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். மேலும் நாளை, தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து இது தொடர்பாக புகார் மனுவையும் அளிக்க உள்ளதாக கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்