தமிழக முதல்வர் தான் திரித்து பேசுகிறார் ..! தமிழிசை கண்டனம் !

Published by
அகில் R

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாக கூறி தென் சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் அவரது X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி ஒட்டு மொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழிசை அவரது X தளத்தில், “தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு தவறான கருத்தை வேண்டுமென்றே பரப்பிக்கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி பேசிய போது ‘ஒரிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தில் இல்லாமல் வெறும் அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் தடுக்கிறார்’ என்ற உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்காக அந்த தனி நபரை குறிப்பிட்டு மட்டுமே பேசினார்.

அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்துவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் திரித்து கூறுகிறார். இதன் மூலம் தமிழர்களை திரு.மு.க.ஸ்டாலின் தான் அவமானப்படுத்துகிறார் என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிட்டு பேசும் போது ஒட்டு மொத்த தமிழர்களையும் அவர் அவமதிக்கிறார் என்று கூறிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் இந்த அவமரியாதையை எல்லா தமிழர்களையும் பற்றி குறிப்பிடுவதாக திரித்து பேசி இருக்கிறார்.

இதனால் என்னை பொறுத்தவரை ஸ்டாலின் தான் மோடி பேசியதை திரித்து பேசி வழக்கம்போல் தனது அரசியல் ஆதாயத்திற்கு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்”, என்று தமிழிசை சவுந்தரராஜன் அவரது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published by
அகில் R

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

5 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

6 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

6 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

7 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

7 hours ago