முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறு.! சமூக இடைவெளியை காற்றில் பறத்தி கூட்ட்டத்தால் அலைமோதிய சென்னை.!

Published by
Ragi

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறத்தி மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி, ஞாயின்றன்று முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .

அந்த வகையில் இன்று தளர்வுகளை அறிவித்த முதல் ஞாயிறு என்பதால் காசிமேடு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறத்தி விட்டு மீன் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அது மட்டுமின்றி சென்னை தீநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. பொது மக்கள் ஊரடங்கால் பல சிக்கல்களை சந்தித்து வந்ததால் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவர்கள் சுய கட்டுபாடின்றி சுற்றி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் தேவைக்கு மட்டும் வெளியே சென்று பாதுகாப்பாக விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

4 hours ago

சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…

5 hours ago

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

7 hours ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

8 hours ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

8 hours ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

8 hours ago