முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறத்தி மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி, ஞாயின்றன்று முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .
அந்த வகையில் இன்று தளர்வுகளை அறிவித்த முதல் ஞாயிறு என்பதால் காசிமேடு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறத்தி விட்டு மீன் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அது மட்டுமின்றி சென்னை தீநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. பொது மக்கள் ஊரடங்கால் பல சிக்கல்களை சந்தித்து வந்ததால் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவர்கள் சுய கட்டுபாடின்றி சுற்றி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் தேவைக்கு மட்டும் வெளியே சென்று பாதுகாப்பாக விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…