மீன்பிடி தடை காலம்:நள்ளிரவு முதல் அமல்-61 நாள்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை!

பொதுவாக வங்கக்கடலில் கடல்வாழ் உயிரினம் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தமிழகத்தின் திருவள்ளூர்,சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை

பொதுவாக வங்கக்கடலில் கடல்வாழ் உயிரினம் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தமிழகத்தின் திருவள்ளூர்,சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.அதைப்போல,புதுச்சேரியிலும் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இதனால் மீன்களின் விலை பன்மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது. மேலும்,இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடை காலம்:நள்ளிரவு முதல் அமல்-61 நாள்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை!