ராயபுரத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7,881ஆக உயர்வு.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் நேற்று மட்டும் சென்னையில் ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்தது, மேலும் சென்னையில் இதுவரை 33,441 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 21,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.சென்னையில் 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,881பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராயபுரத்தில் அதிகமானோருக்கு தொற்று உறுதியானாலும் அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,212 ஆக உள்ளது.
மேலும் அண்ணாநகரில் மொத்த பாதிப்பு 6,033 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தண்டையார்பேட்டை -6,539 பேர், தேனாம்பேட்டை- 6,095பேர், கோடம்பாக்கம்- 5,827 பேர், திருவிக நகர்- 4,666 பேர், வளசரவாக்கம்- 2,611பேர், திருவொற்றியூர்-2,520 பேர், அம்பத்தூர் -2324 பேர், அடையாறு – 3,445 பேர், மாதவரம்- 1,819பேர், பெருங்குடி-1,290 பேர், சோழிங்கநல்லூர்- 1,634பேர், ஆலந்தூர்-1,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…