நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர்! காப்பாற்றிய காவல்துறை

Published by
லீனா

நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர்.

நெல்லை மேலப்பாளையத்தில் அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கடந்த 1986ஆம் ஆண்டு, இவர் தனக்கு சொந்தமான சேவியர் காலனி என்ற இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இழப்பீடு தொகையை கொடுத்து எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இன்று அதிகாலை சேவியர் காலனி உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஏறி, தனது இடத்திற்கு மூன்று மடங்கு இழப்பீடு தொகையை மாநகராட்சி தரவேண்டும் என்றும், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அவரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காவல்துறை உதவி ஆணையர் சேகர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே தீயணைப்பு துறையினர் அவரை சுற்றிவளைத்து கீழே இறக்கினர். இதனை அடுத்து கணேசனை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

14 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

5 hours ago