நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர்! காப்பாற்றிய காவல்துறை

Published by
லீனா

நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர்.

நெல்லை மேலப்பாளையத்தில் அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கடந்த 1986ஆம் ஆண்டு, இவர் தனக்கு சொந்தமான சேவியர் காலனி என்ற இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இழப்பீடு தொகையை கொடுத்து எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இன்று அதிகாலை சேவியர் காலனி உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஏறி, தனது இடத்திற்கு மூன்று மடங்கு இழப்பீடு தொகையை மாநகராட்சி தரவேண்டும் என்றும், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அவரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காவல்துறை உதவி ஆணையர் சேகர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே தீயணைப்பு துறையினர் அவரை சுற்றிவளைத்து கீழே இறக்கினர். இதனை அடுத்து கணேசனை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago