தமிழ்நாடு

மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு – இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

Published by
லீனா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்துக்காக காத்திருந்த போது, பழமையான சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து விழுந்து, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கொழுமம் கிராமத்தில் வேலைக்கு செல்வதற்கு பேருந்துக்காக சமுதாய கூடத்தில் காத்திருந்த மணிகண்டன், கௌதம், முரளி ராஜன் ஆகிய மூவர் அருகே கனமழையால் சேதமடைந்து இருந்த பழமையான மேற்கூரை இடிந்து விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்கூரை இடிந்து விழுந்து…சம்பவ இடத்திலேயே 3 பேர் மரணம்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம். கொழுமம் கிராமம், கொழுமம் – பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று (16-10-2023) காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் திரு.முரளி ராஜா, த/பெ.மன்மதன் (வயது 35), திரு.கௌதம், த/பெ.சின்னதேவன் (வயது 29) மற்றும் திரு.மணிகண்டன், த/பெ.பாபு (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, அவர்களை உடுமலைப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

38 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago