தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பும் குறைந்து கொண்டே வரும் நிலையில், மேலும் பல தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது பண்டிகை காலம் என்பதால், திரையரங்குகளை திறக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதுகுறித்தும், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகளும் திறக்க ஆலோசனை மேற்கொள்ளவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மாலை 3.30 மணிக்கு ரங்கராஜன் குழு அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…