தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படவுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நாளான மே 2-ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதி வரை தான் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…