அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் கிடையாது எனவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சசிகலா வெளியே வந்தவுடன் அவரின் நிலைப்பாட்டை தொடர்ந்தே நடவடிக்கைகள் தெரியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இந்தியா என கூறினார். மேலும், வேளாண் சட்டத்திருத்த மசோதா மூலம் மதுரை மல்லிப்பூவை டெல்லி முதல் லண்டன் வரை கொண்டுசெல்லலாம் என தெரிவித்துள்ளார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…