திருப்பூரில் உள்ள தெற்கு பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்ஸ்பெக்ட்டர் அண்ணாதுரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜூலை 3-ம் தேதி இரவு ஒரு பெண்ணும் ஆணும் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.சந்தேகம் அடைந்த காவல் துறையினர்,அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் கணவன்-மனைவி என்றும் அங்குள்ள ஒரு பனியன் கம்பேனியில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.மேலும் காவல் துறையினர் கேட்ட கேள்விக்கு திக்கி தடுமாறியவாறு பதில் அளித்துள்ளனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.அப்போது இருவரும் PKR காலனியை சேர்ந்த லோகநாதன், கல்லாங்காட்டை சேர்ந்த சுதா என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் கள்ளக்காதல் ஜோடி என்றும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்துள்ளது.மேலும் பெண்ணுடன் வருவதால் காவல்துறையினருக்கு சந்தேகம் வராது என்று எண்ணியதாகவும் கூறியுள்ளனர்.
இவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கைக்காக இரு சக்கர வாகனங்களை திருடி விற்று அதில் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.மேலும் அவர்கள் விற்ற மற்றும் பதுக்கி வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து இரு கள்ளக்காதலர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…