5 ரூபாய் மட்டுமே வாங்கி மருத்துவம் செய்து வந்த திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
கடந்த 1973ல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பை முடித்த திருவேங்கடம் வீரராகவன் முதலில் 2ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கினார். அதனையடுத்து 5 ரூபாயாக உயர்த்திய இவரது இந்த மருத்துவ சேவைக்கு மருத்துவர்கள் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 5 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார். எருக்கஞ்சேரியில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், வியாசர்பாடியில் மாலை 7.30லிருந்து 9 மணி வரையும் மருத்துவம் பார்த்து வந்தார்.
5 ரூபாய் மட்டுமே வாங்கி சிகிச்சை அளிப்பதை குறித்து அவர் கூறிய போது, நான் கட்டணம் இல்லாமல் தான் மருத்துவம் படித்ததாகவும், எனவே தனது சேவையும் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றும் கூறினார். இவரது இந்த சேவையை பாராட்டி கடந்த 2017ல் சிறந்த மனதருக்கான விருதை அரசு வழங்கியது 70 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ரயில்வே உழியருமான மனைவியும்,மருத்துவத்துறையில் பணிபுரியும் தீபக் மற்றும் ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…