ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த வருடம் மூடப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையில் தூத்துக்குடியில் மாசுபாடு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமில்லை என்றும் அனல் மின் நிலையங்களே காரணம் என்று வேதாந்தா தரப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது பேசிய அவர்கள், தூத்துக்குடியில் கடந்த 1996 ம் ஆண்டு முதல் காற்று மாசுபாடு அடைந்து இருப்பதாக தெரிவித்தனர். இது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிரூபிக்கப்பட்டு ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.மேலும்,தூத்துக்குடியில் தற்போது நிலத்தடி நீர் மட்டமும் , காற்றும் பெரும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளாகவும் இதற்கு ஸ்டெர்லைட் ஆளை தன காரணம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…