புதுக்கோட்டையில் 6 பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய 60 வயது மூதாட்டி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளானர்.
புதுக்கோட்டை வடக்கு நாலாம் வீதியிலுள்ள வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கணேஷ் நகரின் காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் பாலியல் தொழில் நடப்பதாக கூறப்பட்ட வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது 6 பெண்கள் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களை அந்த பகுதியை சேர்ந்த சாரதா என்ற 60 வயது மூதாட்டியும், அருண் மற்றும் வீரன் ஆகிய இரு ஆண்களும் சேர்ந்து தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூதாட்டி உள்ளிட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வீட்டை வாடகைக்குக் கொடுத்த வீட்டின் உரிமையாளரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்களுக்கும் அறிவுரை வழங்கிய போலீசார் அவர்களை பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்த்து உள்ளனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…