கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 48 வயதான பாலசுப்ரமணியன் ராஜவீதியில் உள்ள அட்சயா கோல்டு கவரிங் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், இரு தினங்களுக்கு முன்பு இரவு அவரது பொலிரோ காரில் சென்னைக்கு கவரிங் வாங்க சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 10 கிலோ கவரிங் நகையை வாங்கி அவரது பொலிரோ காரில், கோவைக்கு திரும்பி வந்துள்ளார். அவருடன், நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த மேலாளர் 41 வயதான வரதராஜ், மற்றும் கோவை, மதுக்கரையைச் சேர்ந்த 36 வயதுடைய ஓட்டுனர் ரமேஷ் ஆகியோர் பாலசுப்ரமணியனுடன் சென்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு ஆத்துார் புறவழிச்சாலையில் வந்தபோது, சேலத்திலிருந்து, சென்னை நோக்கிச்சென்ற எஸ்.டி கூரியர் மினி லாரி, கார் மீது மோதியது. அதில், இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது விழுந்தது. இந்த விபத்தில், மூன்று பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மோதிய மினி லாரி ஓட்டுனரான திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த 22 வயதான வரதராஜ் என்பவரை ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…