காலை உணவு திட்டம்.! அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளும்.. தமிழக அரசின் விளக்கமும்…

Published by
மணிகண்டன்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மானவர்க்ளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டமானது. இன்று தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதே போல, மற்ற மாவட்டங்களில் மாநில அமைச்சர்கள் , எம்பிக்கள் தொடங்கி வைத்தனர் .

இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்டுத்திய புதிய கல்விகொள்கையில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் காலை உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி கொடுத்து இருக்கும். மனவர்களுக்கு வழங்கும் காலை உணவில் நிறைய சத்துக்கள் இருக்கவேண்டும். முக்கியமாக சிறுதானியங்கள் சேர்க்கப்பட வேண்டும். இட்லி, தோசை கூடாது. புரதசத்துக்கள், நார் சத்துக்கள் இருக்க வேண்டும். உரிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  இதில் நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய அரசு தருவதற்கு தயாராக உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை முன்வைத்த விமர்சனங்களுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு அமைப்பகத்தின் மூலம் பதில் அளித்துள்ளது. அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் குறிப்பிடுகையில், தமிழ்நாடு அரசு வழங்கும் காலைச் சிற்றுண்டியில் தோசை, இட்லி வழங்கப்படுவதில்லை. சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிய உணவில் 5 நாட்களுமே முட்டை வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு நிர்ணயித்த கலோரிகள், புரதத்தை விடவும் அதிகமாகவே தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. என விளக்கம் அளித்து காலை உணவு திட்டம் மற்றும் மத்திய சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் வகை மற்றும் அதில் உள்ள சத்துக்கள் பற்றிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 minutes ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

46 minutes ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

1 hour ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

2 hours ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

2 hours ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

3 hours ago