அம்பேத்கர் சட்ட பல்கலைகழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை, இயக்கூர்த்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகத்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அம்பேத்கர் சட்ட பல்கலைகழக வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் மசோதா உருவாக்கப்ட்டுள்ளது. மேலும், இந்த மசோதாப்படி அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை தமிழக அரசே நியமிக்கும்.
ஏற்கனவே, நடந்த பேரவையில் கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுபோன்று புதிதாக அமைக்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக துணை வேந்தரை, மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…