ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், நாளை நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இலங்கைகக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.நா.சபையில் கொண்டுவரப்படும் தீர்மானித்தின் போது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என அந்நாட்டு வெளியுறவு செயலாளர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.சபையில் நாளை கொண்டுவரும் தீர்மானத்தில் அந்நாட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட பிரதமர் மோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மனதில் கொண்டு ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக நாளை கொண்டுவரும் வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…