எந்த அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு.
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என அரசு கூறிருந்தது. அதுபோன்று சென்னையில் இதுவரை 1,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 98 சதவீதம் எந்த அறிகுறியும் இல்லாமல் தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, தொற்று கண்டறியப்பட்டால் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும்.
அதேபோல், தமிழக அரசு கூறிய வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அதனை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவோர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…