அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

எந்த அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு.

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. 

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என அரசு கூறிருந்தது. அதுபோன்று சென்னையில் இதுவரை 1,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 98 சதவீதம் எந்த அறிகுறியும் இல்லாமல் தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, தொற்று கண்டறியப்பட்டால் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும்.

அதேபோல், தமிழக அரசு கூறிய வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அதனை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவோர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

27 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

54 minutes ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 hour ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

2 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago