ரூ. 1000 வீடு தேடி வருவதில் சிக்கல்..? திட்டமிட்டபடி வழங்கப்படுமா..?

Default Image

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பல மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில், இதுவரை, 48,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 34,245 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  மாவட்டங்களுக்கு வருகின்ற 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரூ.1,000 நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த  நிவாரணம் வழங்கும் பணி 22-ம் தேதி முதல் துவக்க உள்ளது. இந்நிலையில், இல்லத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றம் செய்ய வேண்டும் என நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்