ஹத்ரஸ் மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சீமான் டிவிட் செய்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலர் தங்களது கருத்துக்களையும் இரங்களையும்,தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அச்செய்தியைக் கேள்வியுற்ற நொடி முதல் அடைந்த வேதனையிலிருந்து மீள முடியாது தவித்து வருகிறேன்.
மேலும், கற்பனைக்குக்கூட எட்டாத பாலியல் பெருங்கொடுமையும், அதீத வன்முறையும் அந்த ஏழைப்பெண் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினரை இறுதிமரியாதையை கூட செலுத்தவிடாமல், உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர அவசரமாக அப்பெண்ணின் உடலுக்கு எரியூட்டியது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம்.
இந்நிலையில், இந்நாட்டின் குடிமகனாகப் பிறந்து அநீதிக்கு எதிராக எதுவும் செய்யவியலா இக்கையறு நிலை குற்றவுணர்வுக்குள் தள்ளுகிறது. அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…