துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதன்பின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்ய, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணையவேந்தர்களை இதுவரை ஆளுநர் நியமனம் செய்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் கொண்டுவந்த சட்ட முடிவடிவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து, தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பும் அளித்தனர். இதன்பின்னர் வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டுவந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்து வரும் நிலையில், இனி தமிழகத்திலும் அப்படித்தான்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட 2022 தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நீட் விலக்கு, மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் உள்ள நிலையில், துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும் இன்று அனுப்பப்படுகிறது.
இதற்கு ஒப்புதல் வழங்குவர் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில், துணைவேந்தர்கள் மசோதாவும் அனுப்பப்படவுள்ளது. இதுவரை ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் உள்ள துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், இனி தமிழக அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…