‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது.
மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது.
இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்ற முக்கியமான தகவல்கள் திருடப் படுவதாகவும்,மேலும்,எந்த காரணத்தினாலும் ‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்று கூறி வரும் லிங்குகளை தொட வேண்டாம் என்றும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிங்க் வாட்ஸ்-அப் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ வரும் லிங்குகளை க்ளிக் செய்யவோ,மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்றும்,அவ்வாறு செய்தால் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்படும்” என்றும் கூறி எச்சரித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…