பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

Published by
Venu

விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு  அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.ஒரு அரசியல் கட்சியே தவறாக முடிவு எடுக்கிறார்கள்,பின்னர் திருத்தி கொள்கிறார்கள்.அப்படி இருக்கும்போது ஒரு நடிகர் பேசுறத நாம பெரிசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அதேபோல் சினிமா துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது,எல்லாம் அனுமதிபெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.தயவு செய்து இதற்கு முன்னாள் உள்ள விஷயங்களை பேசி ,ஒருத்தருக்கொருத்தர் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

7 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

8 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

8 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

10 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

10 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

10 hours ago