திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40க்கு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 2 வயது சிறுவன் சுஜித். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்பு குழுவினர் போராடினர்.
சுஜீத்தை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடியவே நேற்று இரவு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
சிறுவனின் உடலுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அனைவரும் தங்கள் இரங்கலை வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுஜித் நடனமாடும் வீடியோ என ஒரு வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. உண்மை ஆராய்ந்ததில் அச்சிறுவன் சுஜீத் இல்லை எனவும், அச்சிறுவன் வேறு ஒருவன் எனவும், தவறாக பகிரப்பட்டு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அச்சிறுவன் பற்றிய உண்மை நிலவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…