காவேரி டெல்டா பாசனத்திற்கான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

Published by
murugan

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டாவின் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்கள் 16 லட்சத்திற்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் தேதி  தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் மாதம் 90 அடியாக இருக்கும்போது பருவமழை நன்றாக பொழிய சூழ்நிலை இருந்தால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நேற்று அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக இருந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர்  முன்னதாக இம்மாதம் நீர்வளத் துறை அமைச்சர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை அமைச்சர், வோளாண்மைத் துறை செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணையின் தற்போதைய நீர் மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட்டார்கள்.

மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, 3-6-2021 அன்று நிலவரப்படி 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல்  பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

2 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

2 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

5 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

5 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

6 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

7 hours ago