தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார். தேர்தல் தொடர்பாக விசிக இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றும் தொடர்ந்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம் எனவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் குறித்த முடிவுக்கும் மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று திமுகவுடன் நடைபெற்றது. இன்று இரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அந்த ஒரு கருத்தின் அடிப்படையில் தான் நாம் இன்னும் பங்கீடு குறித்து பேசி வருகிறோம் என பேசியுள்ளார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் 15 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கு என்ற அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதில் ஒன்றை இலக்கு தொகுதி பங்கீடு என்ற அடிப்படையில் தான் திமுக பேச்சுவார்த்தையில் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…