அனைத்து தொகுதியில் வென்றால் நாம் கைகாட்டுபவரே பிரதமர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

mk stalin

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன் இனி எக்காலத்திலும் மகளிரின் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை யார் வெற்றி பெறுவாரோ அவரை வேட்பாளராக இருப்பார். இவர் தான் இந்த தொகுதிக்கு வேட்பாளர் என்று எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளிடம் பேசிய திமுக அமைச்சர் கே.என்.நேரு எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார். சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது.  சேலம் மாநாடு வெற்றிகரமான மாநாடாக அமையும் என தெரிவித்தார். சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai